Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு:

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (11:30 IST)
சென்னையில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு:
கடந்த 9 மாதங்களாக சீனாவிலிருந்து பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் தற்போது பிரிட்டனில் இருந்து உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கொஞ்சம் வேகமாக பரவி வருகிறது 
 
ஏற்கனவே இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் ஒரு சிலருக்கு பரவியுள்ள நிலையில் சென்னையில் மட்டும் தற்போது மேலும் 3 பேருக்கு உருமறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
இங்கிலாந்தில் இருந்து சென்னை திரும்பியவர்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் முதலில் ஒரே ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளார்
 
இந்த நிலையில் தற்போது பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பிய மேலும் இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இவர்களில் இருந்து இன்னொரு நபருக்கு உருமாரிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மேலும் மூவர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சென்னையில் மட்டும் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது 
 
புதிய வகை கொரோனா குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments