Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொள்ளாச்சி வழக்கில் அருளானந்தம் கைது! – கட்சியை விட்டு நீக்கி அதிமுக அறிவிப்பு!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (11:26 IST)
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தத்தை அதிமுகவை விட்டு நீக்கியதாக அதிமுக அறிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவையே ஸ்தம்பிக்க செய்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பொள்ளாச்சி அதிமுக நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தத்தை அவரது தவறான நடவடிக்கைகளுக்காகவும், கட்சியின் பெயரை களங்கபடுத்தியதற்காகவும் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலக்குவதாகவும், அவரோடு அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அதிமுக தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்