Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணைமுதல்வரின் மனைவிக்கு மிரட்டல் விடுத்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் கைது

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (23:13 IST)
மஹாராஷ்டிர மாநில துணைமுதல்வரின் மனைவி அம்ருதாவுக்கு மிரட்டல் விடுத்த பெண் ஆடை வடிவமைப்பாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய  மா நிலத்தில் முதல்வர் ஹிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இம்மா நிலத்தில் துணைமுதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியிலுள்ளார்.

இந்த நிலையில், பிரபல நகை மற்றும் ஆடை வடிவமைப்பாளரான அனீஷா ஜெய்சிங்கானி என்பவர்  துணைமுதல்வரின் மனைவி அம்ருதாவுக்கு ரூ.1 கோடி கொடுக்கவுள்ளதாகக் கூறி மிரட்டலும் விடுத்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் அனீஷாவுடன் தனக்கு 16 மாதங்கள் தொடர்பில் இருந்தபோது, அவரது தந்தையைக் குற்றவழக்கில் இருந்து விடுவிப்பதற்கு லஞ்சம் கொடுப்பதாகக் கூறி, மிரட்டலும் விடுத்ததாகக் கூறியுள்ளார்.

அம்ருதாவுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் அனிஷாவின் தந்தை ஜெய்சிங்கானிக்கும் தொடர்புள்ளதாக போலீஸில் புகார் அளித்த பின் அவர்கள் பதிவுசெய்த எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில்  அனீஷாவை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். ஏற்கனவே அவரது மகனைக் கைது செய்து விசாரித்து வரும் நிலையில், ஜெய்சிங்கானியை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments