Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணைமுதல்வரின் மனைவிக்கு மிரட்டல் விடுத்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் கைது

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (23:13 IST)
மஹாராஷ்டிர மாநில துணைமுதல்வரின் மனைவி அம்ருதாவுக்கு மிரட்டல் விடுத்த பெண் ஆடை வடிவமைப்பாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய  மா நிலத்தில் முதல்வர் ஹிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இம்மா நிலத்தில் துணைமுதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியிலுள்ளார்.

இந்த நிலையில், பிரபல நகை மற்றும் ஆடை வடிவமைப்பாளரான அனீஷா ஜெய்சிங்கானி என்பவர்  துணைமுதல்வரின் மனைவி அம்ருதாவுக்கு ரூ.1 கோடி கொடுக்கவுள்ளதாகக் கூறி மிரட்டலும் விடுத்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் அனீஷாவுடன் தனக்கு 16 மாதங்கள் தொடர்பில் இருந்தபோது, அவரது தந்தையைக் குற்றவழக்கில் இருந்து விடுவிப்பதற்கு லஞ்சம் கொடுப்பதாகக் கூறி, மிரட்டலும் விடுத்ததாகக் கூறியுள்ளார்.

அம்ருதாவுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் அனிஷாவின் தந்தை ஜெய்சிங்கானிக்கும் தொடர்புள்ளதாக போலீஸில் புகார் அளித்த பின் அவர்கள் பதிவுசெய்த எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில்  அனீஷாவை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். ஏற்கனவே அவரது மகனைக் கைது செய்து விசாரித்து வரும் நிலையில், ஜெய்சிங்கானியை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments