Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

Mahendran
சனி, 2 ஆகஸ்ட் 2025 (15:21 IST)
லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்கள் தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவது, மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சர் துரைமுருகன் கவலை தெரிவித்துள்ளார். காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் மேலும் இதுகுறித்து கூறியதாவது:
 
வெளிமாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்கப்படுவது எதிர்காலத்தில் தமிழக அரசியலை நிச்சயம் பாதிக்கும். குறிப்பாக பிகாரில் உள்ளவர்கள் அங்கேயே வேலைவாய்ப்பை பெற்றிருந்தால் தமிழகம் வந்திருக்க மாட்டார்கள். அவர்கள் இங்கு வந்ததால் இது ஒரு பெரிய சிக்கலாக மாறியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
இந்த விவகாரம், தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் வருகை மற்றும் அதன் அரசியல் விளைவுகள் குறித்து ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

மதுரை மாநாட்டை தள்ளி வைத்த ஓபிஎஸ்.. பாதயாத்திரை செல்கிறார் ஓபிஎஸ் மகன்..!

1 ரூபாய்க்கு BSNL சிம் கார்டு: சுதந்திர தின சலுகை அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments