Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யோக்கியன் செங்கோட்டையன், முகத்திரையை கிழித்த ஸ்டாலின்: தோப்பு வெங்கடாச்சலம் பளீர்!

யோக்கியன் செங்கோட்டையன், முகத்திரையை கிழித்த ஸ்டாலின்: தோப்பு வெங்கடாச்சலம் பளீர்!

யோக்கியன் செங்கோட்டையன், முகத்திரையை கிழித்த ஸ்டாலின்: தோப்பு வெங்கடாச்சலம் பளீர்!
, செவ்வாய், 20 ஜூன் 2017 (11:11 IST)
அதிமுக அரசில் முக்கியமான ஒரு அமைச்சராக வலம் வருபவர் செங்கோட்டையன். ஆனால் அவர் திமுகவுடன் மறைமுகமாக உறவு வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.


 

 
எடப்பாடி அணியில் இருந்து விலகி தற்போது தினகரன் அணியில் இருப்பவர் முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம். இந்த ஆட்சியில் தனது கோரிக்கைகள் நிறைவேறாதது பற்றி நேற்று தனது சொந்த ஊரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசிய ஒரு கருத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செங்கோட்டையனிடம் எத்தனை முறை என்னிடம் பேசினீர்கள் என்று முகத்திற்கு நேராக கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
இதனையடுத்து அவர்கள் இருவரும் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து திமுகவுடன் செங்கோட்டையன் மறைமுக உறவு வைத்துள்ளது தெளிவாகிறது. கட்சிக்கு துரோகம் இழைத்து ரகசிய உடன்படிக்கை செய்ய முயன்ற செங்கோட்டையனின் முயற்சி முடியாமல் போயுள்ளது.
 
செங்கோட்டையன் தான் யோக்கியன் தான் என சட்டமன்றத்தில் பேசும்போது அவரது முகத்திரையை எதிர்க்கட்சித் தலைவர் கிழித்துவிட்டார். ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு செங்கோட்டையனால் பதில் சொல்ல முடியவில்லை. மரியாதை, நாகரீகம் கருதி ஸ்டாலின், இரண்டு வார்த்தையோடு முடித்திருக்கிறார். ஆனால் செங்கோட்டையன் 25 முறை ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியது தெரியவருகிறது என தோப்பு வெங்கடாச்சலம் போட்டுடைத்திருக்கிறார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாப் 5 பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்: ஒரு பார்வை!!