Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சீமானின் கோபம் சரியானதே, ஆனால்”.. சர்ச்சை பேச்சு குறித்து திருமா

Arun Prasath
புதன், 16 அக்டோபர் 2019 (12:19 IST)
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது சரியே என்பது போல் பேசி சர்ச்சையை கிளப்பிய சிமான் குறித்து, திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விக்கிரவாண்டி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது சரி என்பது போல் பேசினார்.

இதனை தொடர்ந்து சீமான் மீது, தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைத்தல், வன்முறையை தூண்டுவது போல் பேசுதல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சை கண்டித்து அதிமுகவினரும் காங்கிரஸாரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய அமைதிப்படைக்கு எதிரான சீமானின் கோபம் சரி தான், ஆனால் விடுதலை புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துகளை கூறும்போது சீமான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சையாக பேசியதை தொடர்ந்து தற்போது சீமான், அதிமுக அமைச்சர்கள் ”அலிபாபாவும் 40 திருடர்கள் போல” என மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments