Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ரம்ஜான் எங்களுக்கு வருத்தமானதாக இருக்கும்: சுவாதி நண்பர் பிலால் உறவினர்கள்

Advertiesment
இந்த ரம்ஜான் எங்களுக்கு வருத்தமானதாக இருக்கும்: சுவாதி நண்பர் பிலால் உறவினர்கள்
, செவ்வாய், 5 ஜூலை 2016 (15:08 IST)
இந்த ரம்ஜான் எங்களுக்கு வருத்தமானதாக இருக்கும் என்று சுவாதியின் நண்பர் பிலால் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


 

சுவாதியுடன் கல்லூரியில் சேர்ந்து படித்து, அவருக்குக் கடைசி வரை நல்ல நண்பராக இருந்து வந்த முகம்மது பிலால் சித்திக் மீது ஒய்.ஜி.மகேந்திரன் வீனாக கொலையாளி என்ற பழியை சுமத்தினார். ராம்குமார் பிடிபட்ட பிறகே முகம்மதுவால் நிம்மதி பெருமூச்சி விட முடிந்தது.

இந்நிலையில், சுவாதிக்கு ஏற்பட்ட துயர சம்பவத்தால், இந்த முறை ரம்ஜானை வழக்கம் போல கொண்டாட போவதில்லை என்றும், சுவாதி குடும்பத்தினரின் துக்கத்தை நாங்களும் பகிர்ந்து கொள்ளப் போகிறோம் என்றும் பிலாலின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

மேலும், பிலாலும், சுவாதியும் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்ததாக வந்த செய்திகள் வெறும் வதந்தியே. இருவரும் கல்லூரியில் படித்தது முதலே நல்ல நண்பர்கள். சுவாதியின் குடும்பத்தினருக்கும் இது தெரியும் என்று பிலாலின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி! - மத்திய அரசு புதிய மசோதா