Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுநிலை பத்திரிக்கைக்கு தர்மம் இதுதான்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (20:22 IST)
சென்னை, கலைவாணர் அரங்கில் ‘கலைஞர் 100 விகடனும், கலைஞரும்’  நூல் வெளியீட்டு விழா இன்று நடந்து வருகிறது.

சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்து வரும் இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘’பத்திரிக்கைகள் அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்களை ஆதரித்து எழுதுங்கள். அப்போதுதான் நீங்கள் விமர்சிக்கையில் அதற்கு மரியாதை இருக்கும். எதையும் ஆதரிக்காமல், விமர்சித்து மட்டும் எழுதினால் அதற்கு மதிப்பு இருக்காது’’ என்று தெரிவித்தார்.

மேலும், சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இயருந்தால் அதைச் சுட்டிக் காட்டுவதுதான் நடுநிலை பத்திரிக்கைக்கு இருக்கும் தர்மம் என்று தெரிவித்துள்ளார்.
 

‘கலைஞர் 100 விகடனும், கலைஞரும்’  நூலில் முதல் பிரதியை முதல்வர் வெளியிட அதை கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments