Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை- திரளான பெண்கள் பங்கேற்று வழிபாடு..

ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை- திரளான பெண்கள் பங்கேற்று வழிபாடு..

J.Durai

நாமக்கல் , சனி, 25 மே 2024 (14:40 IST)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. 
 
இங்கு ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களிலும் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு  பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். 
 
மேலும்  எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டும், வைகாசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உலக நன்மை வேண்டியும், மேலும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், கல்வி, செல்வம், கிடைத்திட திருவிளக்கு பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். 
 
தொடர்ந்து சுதர்சன நாமம் வழிபாடு, அம்மன் துதி பாடல்கள் போன்றவற்றை பாடி ஆராதனையில் ஈடுபட்டனர்.
 
அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருள்மிகு ஸ்ரீ பட்டை பெருமாள் ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாமி கோவிலில் - மூன்றாம் ஆண்டு மஹா ஸம்ப்ரோக்ஷ்ண விழா!