Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி படித்த பள்ளியில் கூட்டுப்பிரார்த்தனை....

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (17:08 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைபாட்டால் அவதியுற்று வரும் நிலையில், அவர் சிறு வயதில் படித்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

 
வயது முதிர்வு மற்றும் உடல் நிலைக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக நலிவு ஏற்பட்டுள்ளது.  கடந்த 2 நாட்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.  
 
அந்நிலையில், நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலை மோசமானது. எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல் நிலை தேறி வருவதாகவும், இன்னும்  2 நாட்கள் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் மருத்துவமனையிலேயே இருப்பார் என செய்தி வெளிவந்துள்ளது.
 
இந்நிலையில், 1939-40ம் ஆண்டு திருவாரூரில் கருணாநிதி படித்த வ.சோ.ஆண்கள் பள்ளியில் தற்போது படிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும் என வலியுறுத்தி கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டு பிரார்த்தனையில் அந்த பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments