Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடிய விடிய மழை - திருவண்ணாமலை அதிகபட்ச மழை பதிவு

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (10:41 IST)
தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என தகவல். 

 
சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நேற்று இரவு முதல் விடிய விடிய சென்னையில் கன மழை பெய்தது. 
 
சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
அதோடு தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வாணியம்பாடி, செய்யாறில் தலா 11 செ.மீ., சென்னை டிஜிபி அலுவலக பகுதியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? நயினார் நாகேந்திரன்

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments