Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு கண்டுபிடித்த மருந்து இதுதான்? – திருத்தணிகாசலம் வாக்குமூலம்!

Webdunia
சனி, 16 மே 2020 (09:17 IST)
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறிய திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் என்ன மருந்து கொடுத்தார் என்பது குறித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வரும் நிலையில் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக திருத்தணிகாச்சலம் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ வைரலானதை தொடர்ந்து சுகாதாரத்துறை அளித்த புகாரின் பேரில் திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறிய அவரை போலீஸார் 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் முதலில் திருத்தணிகாசலம் சித்த வைத்தியத்தை முறையாக பயின்றவரா? அவரிடம் முறையான சான்றிதழ்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேசமயம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக திருத்தணிகாசலம் கூறிய நிலையில் யாராவது அந்த மருந்தை வாங்க வந்தார்களா? எதை மருந்தாக கொடுத்தார் எனவும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவர் தான் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை அளித்ததாக கூறியுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments