திருத்தணியில் மின்வெட்டு; வாக்களிக்க முடியாம திரும்பிய அதிமுக வேட்பாளர்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (10:11 IST)
திருத்தணியின் பல வாக்குச்சாவடிகளில் மின்தடை உள்ளிட்ட இடர்பாடுகளால் வாக்குப்பதிவு தாமதமாகும் நிலையில் அதிமுக வேட்பாளர் வாக்களிக்காமல் திரும்ப சென்றுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

திருத்தணியிலும் பல வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சில பகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்க தாமதமானது. அமிர்தபுரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க திருத்தணி அதிமுக வேட்பாளர் கோ.அரி சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் காத்திருந்த வேட்பாளர் திரும்ப சென்றுள்ளார். மேலும் பல பகுதிகளிலும் வாக்குப்பதிவு எந்திர கோளாறால் மக்கள் சிரமங்களை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments