2 மணி நேரத்தில் 13.80% வாக்குப்பதிவு! – பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (09:58 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல இடங்களில் வாக்குப்பதிவு மிக வேகமாக நடந்து வருவதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் 2 மணி நேரத்திற்குள்ளாக தமிழகம் முழுவதும் 13.80% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கலில் 20.28% வாக்குகளும், சென்னையில் 10.98% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய ப்ரதா சாகு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments