Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருத்தணியில் மின்வெட்டு; வாக்களிக்க முடியாம திரும்பிய அதிமுக வேட்பாளர்!

திருத்தணியில் மின்வெட்டு; வாக்களிக்க முடியாம திரும்பிய அதிமுக வேட்பாளர்!
, செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (10:11 IST)
திருத்தணியின் பல வாக்குச்சாவடிகளில் மின்தடை உள்ளிட்ட இடர்பாடுகளால் வாக்குப்பதிவு தாமதமாகும் நிலையில் அதிமுக வேட்பாளர் வாக்களிக்காமல் திரும்ப சென்றுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

திருத்தணியிலும் பல வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சில பகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்க தாமதமானது. அமிர்தபுரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க திருத்தணி அதிமுக வேட்பாளர் கோ.அரி சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் காத்திருந்த வேட்பாளர் திரும்ப சென்றுள்ளார். மேலும் பல பகுதிகளிலும் வாக்குப்பதிவு எந்திர கோளாறால் மக்கள் சிரமங்களை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 மணி நேரத்தில் 13.80% வாக்குப்பதிவு! – பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்!