Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’அரசியலில் பரபரப்பு’ - விஜயகாந்த் - திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு!

’அரசியலில் பரபரப்பு’ - விஜயகாந்த் - திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு!
, ஞாயிறு, 16 அக்டோபர் 2016 (20:29 IST)
இன்று பிற்பகல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தார்.


 
 
திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் தலைவரான பிறகு திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை சந்தித்தார். மேலும், உடல் நல குறைவால் சிகிச்சை எடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தியுடனும், தனியாகவும் அப்பல்லோ மருத்துவமனை சென்று வந்தார்.
 
இந்நிலையில், இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் பின் அவர் கூறியதாவது, “இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு, அரசியல் நிலவரம் குறித்து விஜயகாந்த்துடன் பேசினேன்.” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தமிழக மக்களின் கவனத்திற்கு’