Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’தமிழக மக்களின் கவனத்திற்கு’

’தமிழக மக்களின் கவனத்திற்கு’
, ஞாயிறு, 16 அக்டோபர் 2016 (19:20 IST)
காவிரி விவகாரத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்து 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க, மக்கள் நல கூட்டணி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் பங்கேற்கின்றன.


 
 
இதில், அரசியல் கட்சியினர், ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு ரெயில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்ய திட்டமிட்டுள்ளனர்.
 
இந்த ரெயில் மறியல் காரணமாக பயணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ரெயில்வே போலீசாரும், மாநில சட்டம்-ஒழுங்கு போலீசாரும் கவனமுடன் உள்ளனர். இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
 
மேலும், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ரெயில் நிலையத்துக்கு வரும் அரசியல் கட்சியினரை நுழைவு வாயிலிலேயே வைத்து கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா குறித்த வதந்தி: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!