Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மநகூ இருந்து திருமாவளவன் வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்பு!

Webdunia
திங்கள், 30 மே 2016 (15:36 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மண்ணை கவ்விய மக்கள் நல கூட்டணி வரும் உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தேர்தலை சந்திக்கும் என கூறியிருந்தது.


 
 
ஆனால் இந்த கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என தேமுதிக நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட்டு தோற்ற வேட்பாளர்கள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் மக்கள் நல கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இந்த கூட்டணியில் விரைவில் வெளியேறுவார் என கூறப்படுகிறது.
 
இனிமேல் மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து எந்த தேர்தலையும் சந்திக்கப்போவது இல்லை என திருமாவளன் முடிவுக்கு வந்துவிட்டதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இந்த தேர்தலில் கூட்டணி தோற்றதற்கு அவர்கள் கூறிய முக்கிய காரணம் வைகோ. வைகோ அதிமுகவின் பி டீம் போல் செயல்பட்டார் எனவும் அதனை மறுத்து சரியான விளக்கமும் அவர் அளிக்க வில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டரத்தில் பேசப்படுகிறது.
 
மேலும் விஜயகாந்தின் செயல்பாடுகளும் இந்த தேர்தலில் முக்கிய காராணமாக கூறப்படுகிறது. இதனால் இந்த கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேறுவார் என கூறும் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடாது எனவும், வருகிற பாராளுமன்ற தேர்தலை அவர்கள் குறிவைத்துள்ளதாக கூறுகின்றனர். அதற்காக காங்கிரஸ் கட்சியுடன் அவர்கள் கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக விசிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments