Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுவாதி கொலையில் உள்ள பின்னணியை மூடி மறைக்க முடியாது: தொல்.திருமாவளவன்

சுவாதி கொலையில் உள்ள பின்னணியை மூடி மறைக்க முடியாது: தொல்.திருமாவளவன்
, திங்கள், 19 செப்டம்பர் 2016 (13:02 IST)
இளம்பெண் சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,


 

புழல் சிறையில் இருந்த ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசார் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர் மரணத்தில் மர்மம் உள்ளது. மேலும் ராம்குமாரின் பெற்றோர் அவரது வக்கீல் ஆகியோர் ராம்குமார் தற்கொலை செய்யவில்லை என்று கூறுவதை புறம்தள்ள முடியாது.

சுவாதி கொலை மற்றும் ராம்குமார் மரணத்தையும் விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும். ராம்குமார் இறந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி இல்லாமல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிதான் விசாரிக்க வேண்டும். ராம்குமாரின் பெற்றோர் கூறுகின்ற மருத்துவ குழுதான் ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். சுவாதி கொலையில் உள்ள பின்னணியை மூடி மறைக்க முடியாது என்று அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய இடைக்காலத் தடை: நீதிபதி அதிரடி!