Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் கிருஷ்ணன் - அர்ஜூனன் உவமை குறித்து திருமாவளவன் கருத்து!

Webdunia
ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (20:12 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை நடைபெற்ற வெங்கையா நாயுடு அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது, 'மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணன் - அர்ஜுனன் போன்றவர்கள் என்றும் அமித்ஷாவை இப்போது யார் என்று அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றும், காஷ்மீர் விவகாரத்தை அமித்ஷ மிக அருமையாக கையாண்டார் என்றும் பாராட்டு தெரிவித்தார் 
 
ரஜினியின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல்வாதி சிலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து  வருகின்றனர். இந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து கூறிய போது 'மோடி - அமித்ஷாவை மகாபாரதத்திலிருந்து கிருஷ்ணன் - அர்ஜுனனுக்கு உவமையாக ரஜினி கூறியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ரஜினியிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர் பார்க்க முடியாது. எனவே அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்
 
 
காஷ்மீரில் ஏற்பட்ட மாற்றத்தை காஷ்மீர் மக்களே ஏற்றுக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் பாகிஸ்தானும், தமிழகத்தில் உள்ள ஒருசில கட்சிகளும் மட்டுமே இன்னும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments