ரஜினியின் கிருஷ்ணன் - அர்ஜூனன் உவமை குறித்து திருமாவளவன் கருத்து!

Webdunia
ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (20:12 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை நடைபெற்ற வெங்கையா நாயுடு அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது, 'மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணன் - அர்ஜுனன் போன்றவர்கள் என்றும் அமித்ஷாவை இப்போது யார் என்று அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றும், காஷ்மீர் விவகாரத்தை அமித்ஷ மிக அருமையாக கையாண்டார் என்றும் பாராட்டு தெரிவித்தார் 
 
ரஜினியின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல்வாதி சிலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து  வருகின்றனர். இந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து கூறிய போது 'மோடி - அமித்ஷாவை மகாபாரதத்திலிருந்து கிருஷ்ணன் - அர்ஜுனனுக்கு உவமையாக ரஜினி கூறியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ரஜினியிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர் பார்க்க முடியாது. எனவே அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்
 
 
காஷ்மீரில் ஏற்பட்ட மாற்றத்தை காஷ்மீர் மக்களே ஏற்றுக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் பாகிஸ்தானும், தமிழகத்தில் உள்ள ஒருசில கட்சிகளும் மட்டுமே இன்னும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments