Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் பாஜகவின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

Mahendran
சனி, 8 பிப்ரவரி 2025 (13:39 IST)
டெல்லியில் பாஜகவின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது என்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களுடைய ஈகோவை கைவிட வேண்டும் என்றும் டெல்லி தேர்தல் முடிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, டெல்லி தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலையில் இருப்பது உண்மையாகவே அதிர்ச்சி அளிக்கிறது என்றும், ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமானால், அது தேசத்திற்கான பின்னடைவாக தான் பார்க்கப்படும் என்றும், நியாயமான முறையில் டெல்லியில் தேர்தல் நடந்திருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை என்றும் கூறினார்.

இந்தியா கூட்டணி தலைவர்கள் இது குறித்து தீவிரமாக கலந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கூட்டணியில் உள்ள கட்சிகள் ஈகோ பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்கான வழியை சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Edited by Mahendran

<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments