Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரையில் தண்ணீர்... இருக்கையில் நடந்தது ஏன்? திருமா பதில்!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (17:38 IST)
தரையில் தண்ணீர் இருந்ததால் இருக்கை மீது நடந்து சென்றது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம். 

 
தமிழகம் வடகிழக்குப் பருவ மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையில் அக்டோபர் முதல் நவம்பர் வரை பெய்யும் இயல்பான மழையின் அளவு 61 செமீ ஆகும். ஆனால் இந்த ஆண்டு 112 செமீ பெய்துள்ளது. இது இயல்பை விட 83 சதவீதம் அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தொடர் மழையின் காரணமாக சென்னையில் சாலைகளில், சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை சீர்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சியினர் ஈடுபடுத்தியுள்ளனர். இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தரையில் தண்ணீர் இருந்ததால் இருக்கை மீது ஏறி நடந்தார். இதற்கு கடும் கண்டணங்கள் எழுந்தன. 
 
இதைடையே இதற்கு விளக்கம் அளித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நான் தங்கியியுள்ளது வீடு அல்ல அறக்கட்டளை. ஒவ்வொரு மழையின் போதும், கழிவு நீர் சூழ்ந்து கொள்ளும். சம்பவ நாளன்று டெல்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இருக்கை மீது ஏறி நடந்தேன். அவசரமாக புறப்பட்ட போது நான் கீழே விழாமலிருக்க தொண்டர்கள் என்னை பிடித்துக் கொண்டனர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments