Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை” திருமா குற்றச்சாட்டு

Arun Prasath
வியாழன், 21 நவம்பர் 2019 (08:43 IST)
அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதால் தான் மறைமுக தேர்தலை நடத்துகிறது என விடுதலை சிறுத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்

உள்ளாட்சி தேர்தல் நெறுங்கி கொண்டிருக்கும் வேளையில், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது இம்மூவரையும் மக்கள் தேர்ந்தெடுக்கமுடியாது, வார்டு கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பார்கள்.

இந்நிலையில் இது குறித்து வைகோ, முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன் மக்கள் செல்வாக்கு இல்லாததால் தான் மறைமுக தேர்தலை நடத்துகிறார்கள். இது ஜனநாயக விரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என கூறியுள்ளார்.

பாஜக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது என திருமாவளவன் பல மேடைகளில் கூறிவரும் நிலையில் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவின் இந்த முடிவு ஜனநாயக விரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments