Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல் நேரத்திலும் அரசியல் செய்யும் திருமாவளவன்: முதல்வருக்கு கேள்வி

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (21:29 IST)
தமிழகத்தை நோக்கி நிவர் புயல் நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே தமிழக அரசு சுறுசுறுப்பாக செயல்பட்டு நிவர் புயலால் ஏற்படும் சேதங்களை கணக்கில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
 
தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பெரும்பாலான பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எதிலும் அரசியல் செய்யும் அரசியல் கட்சியினர் நிவர் புயலிலும் அரசியல் செய்து வருவதாக கூறப்படுகிறது 
 
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். புயல்மழை பருவகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு ஏற்கனவே தமிழக அரசிடம் அளித்த அறிக்கையை தமிழக அரசு செயல்படுத்தாதது ஏன் என்று தமிழக முதல்வர் விளக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் 
 
இந்த கேள்விக்கு பெரும்பாலான நெட்டிசன்கள் புயல் நேரத்தில் தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments