"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - முதலமைச்சர்

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (17:00 IST)
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இதில் சபைகூடும் நாட்களில் நாள்தோறும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளிடையே விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி  திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாடி என்ற பாடலை சுட்டிக்காட்டி பேசினார்.
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள், அதிகரித்து வருவதையும்,  அதுசம்பந்தமாக வெள்யாகிம்  சிசிவிடி காட்சிகளை பார்க்கும் பெண்கள் அச்சப்படுவதாகவும் சபையில் தெரிவித்த காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமராமி. செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோடிக்கை வைத்தார்.
 
இதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் கூறியதாவது : குற்றசம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்கவும், செயின் பறிப்பு, கொலை, கொள்ளை குற்றங்களை தடுக்கவும் சென்னை முழுவது சுமார் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு அதனை காவலர்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்ந்து கண்காணிப்பதாகவும் தெரிவித்தார்.
 
மேலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று 58 ஆண்டுகளுக்கு முன்னரே எம்.ஜி.ஆர் பட பாடல் வரிகளிலேயே உலகிற்கு உணர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments