Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் மழை: எங்கு??

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (12:30 IST)
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.

 
கடந்த சில வாரங்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் இந்த மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 

அதுமட்டுமின்றி வளிமண்டல சுழற்சி காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments