Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரம்பலூரில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டைகளா? அதிகாரி விளக்கம்

பெரம்பலூரில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டைகளா? அதிகாரி விளக்கம்
, சனி, 24 அக்டோபர் 2020 (23:38 IST)
சமீபத்தில் பெரும்பலூர் அருகேயுள்ள குன்னம் கிராமம்,ஆணைவாரி ஓடை ஆகிய பகுதியில் உள்ள வெங்கட்டான் குளத்தில் சில நாட்களுக்கு முன்   டைனோசர்  முட்டைகள் போன்ற படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் முட்டைகள் என்று மக்கள் கூறினர்.

இதை ஆராய்வாளர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்கள் சோதித்து அறிந்து உண்மையக் கூற வேண்டுமென அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பெரம்பலூர் குன்னம் ஏரியில் கண்டறியப்பட்ட ராட்சத உருண்டைகள் டைனோசர் முட்டை இல்லை என்று திருச்சி அருங்காட்சியக காப்பாட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: நத்தை கடல் உயிரினங்களின் படிமங்கள் மீது அம்மோனடை படிவதே இது போன்றா பாறைகள் ஏற்படுவதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் டைனோசர் குறித்த சர்ச்சை முடிந்துள்ளது.

கடந்த சில நாட்களாக லசுமார்  12 கோடி ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் பகுதியில் டைனோசர் வாழ்ந்தததால் அதனுடைய முட்டைகள் தான் தற்போதைய எச்சமா என தமிழகம் முழுவதும் மக்கள் பேசிகொண்டிருக்கும்போது, மறுபக்கம் சமூக வலைதளங்களில் மீம்ஸ் இணையதளத்தைக் கலக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹத்ராஸ் வஞ்கொடுமை வழக்கை விசாரித்து வந்த பெண் அதிகாரி தற்கொலை !