Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரின் மூன்று பிரச்சனைகளை தீர்ப்பேன். விஷால்

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (12:02 IST)
ஆர்.கே.நகரில் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் மூன்று பிரச்சனைகளை தீர்க்கவே இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்

1. இந்த தொகுதியில் மழை நீர் தேங்கும் பிரச்சினை அதிகம் உள்ளது. வெள்ளம் வரும் நேரத்தில் இந்த தொகுதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் நேரம் இது

2. இந்த தொகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதையும் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். நல்ல சாலை வசதி செய்து தர வேண்டும் என்பதே எனது எண்ணம்

3. விளையாட்டுத்துறையிலும் இதுவரை வெளியில் வராத திறமைகள் இந்த தொகுதி இளைஞர்களிடம் உள்ளன, எனவே விழித்தெழுந்து அந்த மக்களுக்காக ஏதாவது செய்ய இதுவே நேரம்.

இந்த தொகுதியில் போட்டியிடுவதால் எனக்கு அரசியல் லாபம் எதுவும் இல்லை. நான் ஒரு சாமானிய மனிதனாக மக்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை உணர்கிறேன், உறுதி செய்யவும் கடமைப்பட்டுள்ளேன்''

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments