ஓபிஎஸ்-இன் சொந்த மாவட்ட நிர்வாகிகளே ஈபிஎஸ்-க்கு ஆதரவு!

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2022 (11:58 IST)
ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடிபழனிசாமி ஆதரவாக இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் எடப்பாடிபழனிசாமி அதில் முந்தி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது தேனி மாவட்ட நிர்வாகிகளே அவருக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுவதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..

பாஜக எம்.எல்.ஏவுக்கு ஜாமின் மறுத்த உச்சநீதிமன்றம்.. கைது செய்ய விமான நிலையத்தில் காத்திருக்கும் காவல்துறை..!

விஜயகாந்தை விட விஜய் திமுகவை அதிகம் காலி பண்ணுவார்!.. டிடிவி தினகரன் ஓப்பன்...

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்த ஜியோ.. என்ன காரணம்?

ரகசியமாக சிறையில் இருந்து வெளியே வந்தாரா இம்ரான்கான்? வெளிநாடு செல்ல திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments