Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நூறு ரூபாயாவது வெக்க கூடாதா.. மனக்குமுறலை எழுதி வைத்த திருடன்! – ஏலகிரியில் விநோத சம்பவம்!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (13:18 IST)
ஏலகிரியில் உள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் திருட நுழைந்த திருடர்கள் அங்கு எதுவும் கிடைக்கவில்லை என எழுதிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்கள் முன்னதாக ஏலகிரி மலை மஞ்சம்கொள்ளை பகுதியில் உள்ள திமுக பொது செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஹார்ட் டிஸ்க் மற்றும் சிசிடிவி கேமராக்களை கழற்றி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அப்பகுதியில் பள்ளி தாளாளர் ஒருவருடைய கெஸ்ட் ஹவுஸிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். அந்த கெஸ்ட் ஹவுஸில் புகுந்த கொள்ளையர்கள் அங்கு திருட எதுவும் கிடைக்காததால் அங்கிருந்த சிசிடிவி கேமரா, டிவி உள்ளிட்டவற்றை திருடி சென்றதுடன், அங்குள்ள மது பாட்டிலை அங்கேயே அருந்திவிட்டு லிப்ஸ்டிக்கில் ”ஒரு நூறு ரூபாய் கூட வெக்க மாட்டீங்களா?” என்று எழுதிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை செயலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments