Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இரண்டாவது அலை கைமீறி விட்டது?! – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

Advertiesment
Tamilnadu
, வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:16 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இரண்டாவது அலை கைமீறி விட்டதாக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் கொரோனா பரவலில் தற்போதைய நிலை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை எல்லை மீறி விட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுவதாகவும், 45 வயதிற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவாக்சின் உற்பத்தி அதிகரிக்கப்படும்… கொரோனா இரண்டாவது அலை எதிரொலி!