Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ரொம்ப பசிக்குது.. மன்னிச்சிடுங்க” – கடிதம் எழுதி வைத்து சென்ற திருடன்!

Webdunia
ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (09:16 IST)
மதுரையில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய திருடன் ஒருவன் கடை உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்து சென்ற சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

மதுரை உசிலம்பட்டியில் சூப்பர்மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார் ராம்பிரகாஷ் என்பவர். வழக்கம்போல இரவு கடையை பூட்டிவிட்டு சென்று விட்டு காலை திரும்பிய போது கடை பூட்டை உடைத்து யாரோ திருடியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சூப்பர் மார்க்கெட்டில் இருந்து 65 ஆயிரம் மதிப்புள்ள உணவு பொருட்களும், கல்லாவில் இருந்த 5 ஆயிரம் பணமும் திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடை உரிமையாளருக்கு திருடன் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் ”திருடியதற்காக மன்னித்துவிடுங்கள். எனக்கு ரொம்ப பசிக்கிறது. இது உங்களுக்கு ஒரு நாள் வருவாய். ஆனால் எனக்கு மூன்று மாதம் வருவாய்க்கு சமம்.” என்று எழுதியுள்ளான் அந்த திருடன். மேலும் போலீஸிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று சிசிடிவி பதிவையும் தூக்கி சென்றதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments