Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தியேட்டர் ஓப்பனிங் எப்போ? நாளை அறிவிப்பு! – அமைச்சர் தகவல்

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (15:59 IST)
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் அடுத்தக்கட்ட தளர்வுகள் அளிக்கப்பட உள்ள நிலையில் திரையரங்குகள் திறப்பு பற்றி அறிவிக்க வாய்ப்பிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில் மாதம்தோறும் மெல்ல மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எனினும் இன்னமும் திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரைகள் போன்றவற்றை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்றுடன் அளிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகள் காலம் முடிவடையும் நிலையில் அடுத்தக்கட்ட அறிவிப்பில் திரையரங்குகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ “நாளை வெளியாகும் தளர்வுகள் பற்றிய அறிவிப்பில் திரையரங்குகள் திறப்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments