Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளம் பெண்ணை வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் !

இளம் பெண்ணை வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் !
, வெள்ளி, 10 ஜூலை 2020 (18:28 IST)
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ் நகர் என்ற பகுதியில் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து  வந்தவர் மாது. இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளார். 

இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒரு இளம் பெண்ணை ஒவர் ஆபாசமாகப் படம் எடுத்து அதைக் காட்டி மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவரை உடனடியாக அவருக்கு வீட்டார் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

ஆனால் மாது.இளம் பெண்ணுடன் எடுத்த போட்டோ, வீடியோக்களை அப்பெண்ணிற்கு அனுப்பி டார்ச்சல் செய்ததுடன் அவரை மிரட்டியுள்ளார்.

பின்னர் இளம்பெண் தருப்பூர் வடக்குக் காவல் நிலையத்தில் மாது மீது புகார் அளித்தார்.  இதனடிப்படையில் போலீஸார்  மாது மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து  அவரிடமுள்ள வீடியோக்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.3,688 கோடி கடன் மோசடி செய்துள்ள பிரபல தனியார் நிறுவனம் !