Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஜல்லிக்கட்டு' வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தமிழ் நாடு அரசு

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (20:50 IST)
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இப்போட்டி, தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு கொரொனா தொற்றைத் தவிர்க்கும் வகையில் ஜல்லிக் கட்டு போட்டிகள் நடத்த வழிகாட்டு   நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ் நாடு அரசு.
அதில்,

*ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு  அமைத்துக் கண்காணிக்க வேண்டும்.

*ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பே அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும்.

*ஜல்லிக்கட்டின் போது காளைகளுடன் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ள 2 பேர் மட்டுமே செல்ல அனுமதி எனவும், காளைகளுக்கு தேவையற்ற வலியை உண்டாக்கும் செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 ALSO READ: மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டம்: கமல்ஹாசன்

*போட்டிகள் நடக்கும் நேரத்தில் அனைத்தும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

*அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே போட்டிகள் நடத்த வேண்டும்.

* மாநில அரசின் உத்தரவுகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*பார்வையாளர்கள் 300 பேர் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவுக்கே அனுமதி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments