Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஜல்லிக்கட்டு' வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தமிழ் நாடு அரசு

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (20:50 IST)
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இப்போட்டி, தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு கொரொனா தொற்றைத் தவிர்க்கும் வகையில் ஜல்லிக் கட்டு போட்டிகள் நடத்த வழிகாட்டு   நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ் நாடு அரசு.
அதில்,

*ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு  அமைத்துக் கண்காணிக்க வேண்டும்.

*ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பே அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும்.

*ஜல்லிக்கட்டின் போது காளைகளுடன் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ள 2 பேர் மட்டுமே செல்ல அனுமதி எனவும், காளைகளுக்கு தேவையற்ற வலியை உண்டாக்கும் செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 ALSO READ: மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டம்: கமல்ஹாசன்

*போட்டிகள் நடக்கும் நேரத்தில் அனைத்தும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

*அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே போட்டிகள் நடத்த வேண்டும்.

* மாநில அரசின் உத்தரவுகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*பார்வையாளர்கள் 300 பேர் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவுக்கே அனுமதி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments