Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட் சரியா? கமல்ஹாசனின் அதிரடி பதில்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (10:00 IST)
மேகதாது அணை பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதற்கு அதிமுகவை அடிக்கடி விமர்சனம் செய்யும் கட்சிகளே கண்டனம் செய்துள்ள நிலையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது நல்லதுதான் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹசான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டம் தொடங்கியதில் இருந்தே மக்களவையிலும் மாநிலங்களவையிலும் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு ஆகியோர் அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் கருத்து கூறிய கமல்ஹாசன், 'அதிமுக எம்பிக்களின் இடைநீக்கம் சரியான நடவ்டிக்கைதான் என்று தெரிவித்தார். முன்னதாக இந்த இடைநீக்கம் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments