Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய சப்-இன்ஸ்பெக்டர்

Webdunia
சனி, 24 ஜூன் 2023 (13:24 IST)
விளாத்திகுளத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய சப்- இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்தவர் சுதாகர். இவர். இந்தக் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்க வந்த பெண் ஒருவரின் செல்போன் எண்ணை அவரது புகார் மனுவில் இருந்து எடுத்து, இரட்டை அர்த்தத்தில் பேசி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அப்பெண் தன் கணவரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து  கணவர் சப்இன்ஸ்பெக்டரிடம் சென்று எதற்கு என் மனைவிக்கு தொல்லை கொடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதற்கு உன்னை தூக்கி உள்ளே வைத்துவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

இதையடுத்து, கணவன், மனைவி இருவரும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பாலாஜியிடம் சென்று புகார் கொடுத்தனர். விசாரணை நடத்திய பின், சப் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பாலத்தை எவன் கட்டியது? மத்திய பிரதேச பாலத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

எரியும் கப்பலை கயிறு கட்டி இழுக்க முயற்சிக்கும் இந்திய கடலோர படை.. என்ன காரணம்?

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்??

மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.. அவர் முடியாது என்று கூறிவிட்டார்: வங்கதேச பிரதமர்

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments