ரூ.5 கோடியில் தாய்க்கு தாஜ்மஹால் கட்டிய மகன்... குவியும் பாராட்டு

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (17:18 IST)
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடியில்,  46 அடி உயரத்தில் ரூ. 5 கோடியில் தன் தாய்க்கு கோவில் கட்டியுள்ளார் அமுர்தீன் என்பவர்.

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அமுர்தீன். இவர் சென்னையில் பிரபல தொழிலதிபராக  வலம் வருகிறார். இவர் 11 வயதாக இருக்கும்போது தந்தை அப்துல்காதர் உயிரிழந்தார்.

அதன்பின்னர், அவரது தாய் ஜெய்லானி பீவி  தன் மகன் மற்றும் மகள்களை நன்றாக படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேற உதவி உள்ளார்.

இதனால், தன் தாயின் மீது அதிகளவு பாசம் வைத்திருந்திருந்தார் அமுர்தீன். இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு வயது முதிர்வால் ஜெய்லானி பீவி உயிரிழந்தார்.

இதையடுத்து, தன் தாய்க்கு ஒரு நினைவில்லம் கட்ட முடிவெடுத்து, டெல்லியில் உள்ள தாஜ்மஹால் போன்று தன் தாய்க்கு   ரூ. 5  கோடியில் நினைவில்லம் கட்டி,  கடந்த ஜூன் 2 ஆம் தேதி இந்த நினைவில்லம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவில்லம், திருவாரூரில், ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடியில், 46 அடி உயரத்தில் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட  வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது.

இது தென்னகத்தின் தாஜ்மஹால் என்று அழைக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments