Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பேருந்தின் மேற்கூரை சரிந்து கீழே விழுந்ததால் பரபரப்பு

Webdunia
புதன், 31 மே 2023 (18:04 IST)
சென்னை மாநகர பேருந்து ஒன்று திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்குச் சென்றுகொண்டிருக்கும்போது பலத்த காற்று வீசியதில், பேருந்தின் மேற்கூரை தூக்கிவீசப்பட்டது.

சென்னை மாநகர பேருந்து ஒன்று,  திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு நேற்று மாலை சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று காற்றுடன் கூடிய மழை பெய்தது.

பலத்த காற்று வீசியதில் அரசுப் பேருந்தின் மேற்கூரை சரிந்து கீழே விழுந்தது. இதில், பேருந்திற்குள் அமர்ந்திருந்த பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து, பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டது.

பேருந்தில் வந்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று செங்குன்றம் டிப்போவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அரசுப்பேருந்தின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments