Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவுக்குள் 14 மாவட்டங்களை குளிர்விக்க போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth Karthick
செவ்வாய், 14 மே 2024 (19:46 IST)
தமிழகத்தில் கடந்த வாரம் முதலாகவே நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் மே மாதம் அக்கினி வெயில் தொடங்கியிருந்தாலும் ஆங்காங்கே மழையும் பெய்து வருவதால் மக்கள் நிம்மதியில் ஆழ்ந்துள்ளனர். நேற்று முன் தினம் முதலாகவே தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அங்கிளை அங்கிள்னுதானே சொல்ல முடியும்! - விஜய் பேச்சு குறித்து மன்சூர் அலிகான்!

அமலாக்கத்துறை சோதனையின்போது தப்பிக்க முயன்ற எம்.எல்.ஏ.. விரட்டி பிடித்த அதிகாரிகள்..!

காசா மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பத்திரிகையாளர்கள் உட்பட 15 பேர் பலி

கடன் பெற சிபில் ஸ்கோர் அவசியமில்லை: வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்..!

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 10 ஆண்டுகள் வரை சிறை: தமிழக அரசு

அடுத்த கட்டுரையில்
Show comments