Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெட் வேகத்தில் உயர்ந்த அரிசி விலை..! கிலோவுக்கு ரூ.200 அதிகரிப்பு.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!!

Senthil Velan
வியாழன், 1 பிப்ரவரி 2024 (15:51 IST)
தமிழ்நாட்டில் அரிசி விலை திடீரென உயர்ந்துள்ளது. மூட்டைக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்திருந்தது.  இதனால் அங்கு குறைவான சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்துள்ளதால், வெளிமாநில வியாபாரிகள், டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்து வருகின்றனர். தற்போது வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.  

ALSO READ: மத்திய இடைக்கால பட்ஜெட்.! தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்..!!

சென்னையில் 26 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 முதல்  ரூ.200 வரை அதிகரித்துள்ளது. இதேபோல், ஆந்திரா பொன்னி, பிரியாணி அரிசிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments