Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொங்கல் பண்டிகையொட்டி மல்லிகை பூவின் விலை உயர்வு!

பொங்கல் பண்டிகையொட்டி மல்லிகை பூவின் விலை உயர்வு!
, வியாழன், 12 ஜனவரி 2023 (22:41 IST)
பொங்கல் பண்டிகையொட்டி மாட்டுத்தாவணியில் உள்ள சந்தையில் மல்லிப்பூ ரூ.2500க்கு விற்பனை ஆகிறது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை திரு நாளையொட்டி  எல்லா மாவட்டங்களிலும், கரும்பு, மஞ்சல், இஞ்சி, பூக்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது.

இந்த  நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர்ச் சந்தையில் ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.2,500 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ முல்லை பூ ரூ.1300க்கும், பிச்சிப் பூ கிலோ ரூ.1200 க்கு விற்பனையாகிறது.

கனகாம்பரம் ரூ.300 – ரூ. 1500க்கும், ரோஜா பூக்கள் 50 முதல் 250 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மல்லிகை பூவில் விலை உச்சத்தைத் தொட்டுள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைனில் போரிட மறுத்த ராணுவ வீரருக்கு சிறைத்தண்டனை