Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தை தொடும் பூண்டு விலை! - மக்கள் அதிர்ச்சி!

Prasanth Karthick
திங்கள், 11 நவம்பர் 2024 (10:20 IST)

தமிழ்நாடு காய்கறி சந்தைகளில் வெங்காயத்தில் விலை உயர்வை தொடர்ந்து பூண்டின் விலையும் உயர்ந்து வருகிறது.

 

 

தமிழ்நாட்டின் சந்தைகளுக்கு நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து பூண்டு விற்பனைக்கு வந்தாலும், தேவையை ஈடு செய்வதற்காக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் இருந்து அதிகளவில் பூண்டு இறக்குமதி செய்யப்படுகின்றன.

 

ஆனால் கடந்த சில வாரங்களாக மேற்படி மாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து குறையத் தொடங்கியுள்ளதால் விலை உயரத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பூண்டு மொத்த விற்பனையில் அதிகபட்சமாக ரூ.400 வரை விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் ரூ.500 வரை தொட்டுள்ளது.

 

தொடர்ந்து பூண்டின் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டு அறுவடை ஜனவரி மாதத்தில்தான் நடைபெறும் என்பதால் அடுத்த சில வாரங்களுக்கு விலை உயர்வு இருக்கும் என்றும், பின்னர் படிப்படியாக வரத்து அதிகரித்து விலை குறையும் என்றும் கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments