Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாறு காணாத அளவிற்கு பூண்டு விலை உயர்வு..! ஒரு கிலோ ரூ.500-யை தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி..!

Senthil Velan
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (10:33 IST)
சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு பாரம்பரிய சந்தையில் பூண்டின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 500 ரூபாயை தாண்டி விற்பனை ஆவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் சேத்தியாத்தோப்பு பாரம்பரிய சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தை கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. 
 
சந்தையின் சிறப்பு அம்சமே இங்கு விற்பனையாகும் பொருட்கள், காய்கறிகள் எப்போதும் விலை குறைவாகவும் தரமாகவும் கிடைக்கும் என்பதுதான். ஆனால் இப்படிப்பட்ட சந்தையிலேயே ஒரு கிலோ பூண்டின் விலை 450-லிருந்து 510 ரூபாய் வரை விற்பனையாகுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
கடந்த பல மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு சராசரியாக  150, ரூபாயிலிருந்து 180 ரூபாய் என விற்பனையானது. தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள பூண்டு விலையால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர் 
 
சராசரி மக்களின் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் நிலையில், அன்றாட செலவினங்கள் கூட செய்ய முடியாமல் ஏழை எளிய மக்கள் திண்டாடி வருகின்றனர்.

ALSO READ: முறைகேடாக செயல்படும் சுங்கச்சாவடி..! 10 ஆண்டுகளாக கட்டணம் வசூல்.! கண்டு கொள்ளாத அதிகாரிகள்.!!
 
இந்நிலையில் அத்தியாவசிய பொருளான பூண்டின் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு.. உடன் வந்த நண்பர்கள் சோகம்..!

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து வேலுமணியும் டெல்லி பயணம்.. அதிமுகவில் பரபரப்பு..!

ஆஸ்கர் விருது வென்ற இயக்குனரை கடத்திய இஸ்ரேல் ராணுவம்!? - இஸ்ரேலில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments