Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக நிர்வாகி சொன்ன ’அந்த ஒரு வார்த்தை ’ : கண்கலங்கிய விஜயகாந்த்

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (13:38 IST)
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக போன்ற கட்சிகளின் தலைமை வேட்ளார்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றன.
தற்போது அதிமுக கூட்டணியில் 4 சீட் பெற்றுள்ள தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நேர்காணல் நடைபெறுகிறது. இதில் அனைத்து வேட்பாளர்களிடமும் கல்விசான்றிதழ், ரிசர்வ் தொகுதி என்றால்,அதற்குரிய சான்றிதழ், ஆகியவற்றை கொண்டுவரவும் கட்சிதலைமை உத்தரவிட்டது.
 
இதனடிப்படையில் நெல்லை தொகுதியில் போட்டியிட ஆனந்த மணி என்பவர்  விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். தலைமை அலுவலகத்தில் நேர்காணல் குழுவினர் அவரிடம் நேர்காணல் நடத்தினர். அத்தொகுதியில் வெற்றி வாய்ப்பு பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அப்போது இருந்தார்.
 
அதற்கு ஆனந்தமணி  கூறியதாவது: தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று நான் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. நான் கேப்டனை பார்க்கவே வந்தேன். என்று தெரிவித்தார். 
இந்த பதிலைக் கேட்ட’ விஜயகாந்த் கண்கலங்கி நெகிழ்ந்துள்ளார்.’ நீண்ட காலத்திற்குப் பிறகு கட்சியினர் விஜயகாந்தை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments