மக்கள் நீதி மய்யம்' கட்சியின் அடுத்த பொதுக்கூட்டம் எங்கே?

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (16:57 IST)
கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சி நேற்று மதுரையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டு அதன் கொடி, கொள்கைகளும் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த கூட்டத்திற்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மதுரையில் நடத்திய பிரமாண்டமான பொதுக்கூட்டம் போன்று அடுத்த பொதுக்கூட்ட அறிவிப்பையும் கமல் இன்று தெரிவித்துள்ளார்.

இதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த பிரமாண்டமான பொதுக்கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என்றும் அதற்கு முன்னர் திட்டமிட்டபடி அனைத்து இடங்களுக்கும் தான் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கமல் தெரிவித்தார்.

மதுரையை அடுத்து திருச்சியிலும் ரசிகர்கள் லட்சக்கணக்கில் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments