நித்யானந்தா இறந்துவிட்டாரா? சீடரின் வீடியோவால் அதிர்ச்சி.. ரூ.4000 கோடி சொத்து யாருக்கு?

Siva
செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (11:36 IST)
நித்யானந்தா உயிரிழந்ததாக அவரது சகோதரி மகன் அறிவித்த நிலையில், அவரது அறக்கட்டளைக்கு சொந்தமான ₹4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
பாலியல் புகாரில் சிக்கிய நித்யானந்தா இந்திய காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னர் நாடு விட்டு வெளியேறி, "கைலாசா" என்ற தனிப்பட்ட நாட்டை உருவாக்கினார். 
 
கைலாசா நாட்டிலிருந்து வீடியோக்கள் மூலம் அவர் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில், சமீபகாலமாக அவரது உடல்நிலையில் சிக்கல்கள் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. தற்போது அவரது சகோதரி மகன், நித்யானந்தா உயிரிழந்ததாக அறிவித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
 
இந்த நிலையில் அவரது அறக்கட்டளைக்கு சொந்தமான ₹4000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிப்பது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில்  அவர் உண்மையில் உயிரிழந்தாரா? இல்லையா? என்ற கேள்விக்கு உறுதியான பதில் இன்னும் வெளிவராத நிலையில், இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாக முடங்கியிருக்கிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில் குளித்த வாலிபர் கைது.. எல்லை மீறி போகும் ரீல்ஸ் மோகம்..!

இன்று முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

கருத்துக்கணிப்புகள் மக்கள் தீர்ப்பு அல்ல.. கோடி மீடியாவின் பிரச்சாரம்: தேஜஸ்வி

அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி.. விஜய்யின் காட்டமான பதிவு..!

காவல்துறை வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.. சிவகெங்கையில் பயங்கர விபத்து..!

அடுத்த கட்டுரையில்