Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசுப்பணம் வாங்க வரிசையில் நின்றவர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (19:29 IST)
பொங்கல் பரிசு வாங்க வரிசையில் நின்ற வாலிபர் ஒருவர் சுருண்டு விழுந்து மரணம் அடைந்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் மற்றும் ரூபாய் ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொடுக்கப்பட்டு வருகிறது
 
இன்று முதல் 12ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இந்த பொங்கல் பரிசுகளை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இந்த பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் வாங்க நீண்ட வரிசையில் ரேஷன் கடை முன் பொது மக்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் அனைகுப்பம் என்ற பகுதியை சேர்ந்த நடராஜ் என்ற வாலிபர் பொங்கல் பரிசை வாங்குவதற்காக இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்ததாக தெரிகிறது. அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த சம்பவத்தால் பொங்கல் பரிசு வாங்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments