Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம்: ஒருவர் கைது..விமானி உட்பட 5 பேர் சஸ்பெண்ட்!

Flight
, சனி, 7 ஜனவரி 2023 (16:40 IST)
விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர் டெல்லி போலீஸார்.
 

ஏர் இந்தியா விமானத்தில் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற நபர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பயணி புகார் கொடுத்திருதார்.

இதனடிப்படையில், டெல்லி காவல்துறையினர் இன்று சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவை கைது செய்தனர்.


மேலும், ஏர் இந்திய விமானத்தை செலுத்திய விமான, 4 சிப்பந்திகள் என மொத்தம் 5 பேரிடம் விளக்கம் கேட்டு ஏர் இந்தியா நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விசாரணை முடிவரையும் வரையில், 5 பேருக்கும் பணி வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு தனி நபரின் கையில் எல்லா திரையங்குகளின் நிர்வாகம்? திருமாவளவன்