Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்....முண்டியடித்த கூட்டம்

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (19:03 IST)
இன்று உலகமெங்கும் மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது. எல்லோரும் சிங்கப் பெண்களுக்கு பாராட்டுகளும்,வாழ்த்துகளும் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டோக்கன் முறைப்படி ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படும் என்ற அறிவிப்பால் அங்கு கூட்டம் கூடியது.

மற்ற உணவுகளைவிட பிரியாணிக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு, அதன் சுவைக்கும் மணத்திற்கும் உலகமே அடிமையாகியுள்ளது.

இந்நிலையில் இன்று மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உப்புக்கறி உணவகம் உழைக்கும் பெண்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு பிளேட் சிக்கன்  பிரியாணி 1 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்தது.

இதனால் சிறியோர் முதல் முதியோர் வரை அனைவரும் அந்த ஹோட்டலில் வரிசையில் நின்றனர். பின்னர்  ஒருவருக்கு 1 டோக்டன் என்ற முறைப்படி 1 பாக்ஸ் பிரியாணி வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments